கடந்த 10.04.2014 அன்று சிவபதமெய்திய எமது குடும்ப தலைவி திருமதி வேலும்மையிலும் மகேஸ்வரி அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09.05.2014) ஆலடி இல்லத்தில் நடைபெறும். அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இதேவேளை அன்னார் இறைபதமெய்திய நேரத்தில் உடன் வந்து உதவியர்கட்கும்,செய்தி கேள்வியுற்று துயரத்தில் பங்கேற்றவர்களுக்கும், இறுதிக் கிரியைகளில் பங்கேற்றவர்களுக்கும், தொலைபேசி, இணையம் மூலமாக அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கும், பருத்தித்துறை உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள் சங்கத்துக்கும் , துயருற்ற வேளை உணவிட்டு உபசரித்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.