உதயசூரியன் கழக 50 ஆவது ஆண்டு விழா நிறைவு, இறுதி இரவு நிகழ்வுகள் மழையினால் ரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது நிறைவையொட்டி, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் 04:30 மணியளவில் ஆரம்பமாகியது.
விழாவின் விருந்தினர்கள் வல்வை நெடியகாடு பிள்ளையார் ஆலயத்திலிருந்து தமிழர் பாரம்பரிய அடையாளங்களான நாதஸ்வர வாத்தியத்துடன், மயிலாட்டம் , குதிரையாட்டத்துடன் பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியூடாக உதயசூரியன் உல்லாச கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.
நிகழ்வின் ஆரம்பமாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைதொடர்ந்து உதயசூரியன் விளையாட்டுக்கழக சிறுமிகளின் நடன நிகழ்வு இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து விருந்தினர்கள் உரை இடம்பெற்றது.
விருந்தினர்கள் உரையினைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கெளரவிக்கப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு
1. கனகசாபாவதிப்பிள்ளை (கவிஞர் அண்ணா )
2.திரு. மு . தங்கவேல்
3. திரு . க .தேவசிகாமணி
கௌரவிப்பு நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வைத் தொடர்ந்து,
கடந்த வருடம் க.பொ.த சதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மாலை 09:00 மணியளவில் உதயசூரியன் கடற்கரை மைதானம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது.
ஆனாலும் இதன் பிறகு ஏற்பட்ட கடும் மழையினைத் தொடர்ந்து தொடர்ந்து நடைபெறவிருந்த நிகழ்வுகள் அனைத்து நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.