தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று வல்வையில் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 06/09/2013 (வெள்ளிக்கிழமை)
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலையொட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இன்று பிற்பகல் 06:00 மணியளவில், வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
வல்வெட்டித்துறை கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தில் வணக்கத்துடன் ஆரம்பித்திருந்த இப்பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.இரா.சம்பந்தன், திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.என்.சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்களில் ஒருவரான திரு.M.K.சிவாஜிலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதன்மை வேட்பாளர் திரு.சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருந்தனர்.
பிரச்சாரக் கூட்டத்தில் வல்வெட்டிதுரையைச் சேர்ந்த திரு.நவரத்னசாமி அவர்களும் உரையாற்றியிருந்தார்.
இரவு 11:00 மணி வரை நீடித்திருந்த பிரச்சாரக் கூட்டம், திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களின் உரையுடன் நிறைவடைந்தது.
கூட்டம் நடைபெற சற்றுமுன்னர், வல்வை உதயசூரியன் கடற்கரை
கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தில் வணக்கத்தில் ஈடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
வல்வையைச் சேர்ந்த திரு.நவரத்னசாமி அவர்கள் உரையாற்றுகின்றார்
கூட்டமைப்பின் வட மாகாணசபை முதன்மை வேட்பாளர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உரையாற்றுகின்றார்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.