உலக மண் தினத்தை (World Soilday - WSD), முன்னிட்டு வட மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் உள்ளூராட்சி சபைகளினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனசமூக நிலையங்களிடையே "எமது கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகள் அற்ற அழகிய பசுமையான கிராமமாக மாற்றுவோம் என்ற தொனிப்பொருளில் போட்டியொன்று நடாத்தப்பட்டது.
இதில் வல்வெட்டித்துறை நகர சபை சார்பாக தொண்டமனாறு கலைவாணி சனசமூக நிலையம் பங்குபற்றி மாவட்ட மட்டத்திலும் தொடர்ந்து மாகாண மட்டத்திலும் முதலாமிடத்தை பெற்றுள்ளது.
இந்தப் போட்டி மாணவர்களிடையே மரம் நாட்டுதல், சுவரோவியம் வரைதல் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் பரிசீலிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் பங்கு கொண்ட மாணவர்கள் அனைவரும் யா|தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர சபையின் அனுசரணையில் கலைவாணி சனசமூக நிலைய ஏற்பாட்டில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் மாணவர்கள் சிறப்பான முறையில் தம்முடைய திறன்களை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
Deivachandran (Uk)
Posted Date: December 09, 2023 at 14:26
இப்போட்டிக்கு ஒழுங்குகள் செய்த ஆசிரியர் ஆசிரியைகளுக்கு சேர்த்து வாழ்துகள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.