ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.
1943/04/14 அன்று பிறந்த விஜயரட்ணம் அவர்கள் தனது 81 வது வயதில் காலமானார். இவர் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார்.
கிராமிய பாடல்களாக இருந்தாலும் சரி, திரையிசை பாடல்களாக இருந்தாலும் சரி, பக்திப் பாடல்களாக இருந்தாலும் சரி இனிமையான குரலில் பாடி பலரையும் மகிழ்வூட்டி வந்த விஜயரட்ணம் அவர்களது இழப்பு ஈழத்துக் கலைஞர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
1980 களில் தென்னிந்திய பாடகரான சௌந்தர்ராஜன் அவர்கள் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடாத்துவதற்காக வருகை தந்த போது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையான பாடி அசத்திய வயிரவிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட பாடகரான சௌந்தரராஜன் அவர்கள் ஈழத்து சௌந்தர்ராஜன் என்கின்ற பட்டத்தை வழங்கியிருந்தார்.
இதனால் தான் அவர் ஈழத்தைச் சௌவுந்தராஜன் என்று அழைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, வடமராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல ஆலயங்களுக்கு அவர் தனது குரலில் அதிகளவான பாடல்களை பாடியிருந்தமை குறிப்பிட தக்கதாகும்.
அவரது புகழுடல் நேற்று நாகர்கோவில் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. (பிரதி)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.