தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையே நடாத்திய மென்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ் மாவட்ட இளைஞர் கழகம் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்ட யாழ் மாவட்ட இளைஞர் கழக மென்பந்தாட்ட அணி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்று வல்வெட்டித்துறை சந்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வல்வெட்டித்துறை பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை நடைபெற்றது.
இக் கௌரவிப்பு விழாவினை வல்வை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகத்தினால் ஒருங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்விற்கு கழுகுகள் விளையாட்டுக்கழகத் தலைவர் திரு.சதீஸ் தலைமை தாங்க, சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.M.K.சிவாஜிலிங்கம், திரு.ஆர்னோட், திரு.சுகீர்தன் , திரு.சிவயோகம், திரு.விந்தன் ஆகியோரும் வல்வை நகரசபை செயலாளர் திருமதி கிரியா வாசுதேவன் மற்றும் வல்வையின் விளையாட்டுக்கழகப் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்ட யாழ் மாவட்ட இளைஞர் கழக மென்பந்தாட்ட அணியில் வல்வை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் செந்தூரன், செல்வன் நந்தபாலனும், வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வன் ரஞ்சித்குமாரும் பங்கு பற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் தேசிய ரீதியிலான போட்டியில் பங்கு பற்றிய வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்புப்பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
யாழ் மாவட்ட இளைஞர் கழக அணியானது அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கம்பகா இளைஞர் கழக அணியுடனான அரையிறுதி போட்டியில் கம்பகா இளைஞர் கழக அணி வீரர்களாலும், பார்வையாளர்களாலும், போட்டி குழப்பப்பட்டு கம்பகா இளைஞர் கழக அணியினருக்கு வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது இளைஞர் கழகங்களுக்கிடையே பெரும் சர்ச்சையினை ஏற்ப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.