கொழும்பு கட்டுநாயக்கா அதி வேக நெடுஞ்சாலை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/10/2013 (திங்கட்கிழமை)
அண்மையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டிருந்த ''கொழும்பு கட்டுநாயக்கா அதி வேக நெடுஞ்சாலை" (Colombo - Kattunayake Express way) நேற்று 09.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப் புதிய நெடுஞ்சாலையினால் கொழும்பு மற்றும் இலங்கையின் பிரதான விமான நிலையம் அமைந்துள்ள கட்டுநாயக்காவிற்கு இடைப்பட்ட சுமார் 26 கிலோ மீட்டர்களை 20 நிமிடத்தில் கடக்க முடியும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இப்புதிய பாதை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான வழியில் அமைந்துள்ளது என்பதும், இதனால் இப் புதிய பாதையைப் பாவிப்பதன் மூலம், யாழ் - கொழும்பிற்கு இடையிலான பயண நேரத்திலும் குறிப்பிடக்கூடிய நேரம் மீதப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.