வல்வை சிதம்பராக் கல்லூரி நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2013 (சனிக்கிழமை)
யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டிற்கான நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் திங்கட்கிழமை கல்லூரியின் கலையரங்கவளாகத்தில் பிற்பகல் 02.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
வல்வை பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி) அவர்களும், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு.கந்தர் பொன்னையா (கோட்டக் கல்விப் பணிப்பாளர், மருதங்கேணி) ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
முன்னாள் காட்லிக் கல்லூரி ஆசிரியரும், கொழும்பு ஆண்கள் இந்துக்கல்லூரி ஓய்வு நிலை பிரதி அதிபரும், வடமராட்சி வடக்கு முதியோர் பேரவைதத்தலைவருமான திரு.சிவா.கிஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்பு பேருரை வழங்கவுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.