யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறை உள்பட்ட பல இடங்களில் நேற்றிலிருந்து (நேற்று) பரவலாக கடும் மழை பெய்துள்ளது. வல்வெட்டித்துறையில் நேற்று நண்பகலிருந்து மாலை வரை தொடர் மழை பெய்துள்ளது.
தற்பொழுது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மழை அவ்வப்போது பெய்து கொண்டிருக்கின்றது.
மேலும் அசாதாரண காலநிலையால் பருத்தித்துறை தொடக்கம் தொண்டைமானாறு வரையிலான கடற்பிரதேசங்கள் மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் காற்று பலமாக வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது. இதனால் ஆழ்கடல் மீன்பிடி குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டமானது வடகிழக்கு பருவ பெயர்ச்சிக் காலநிலையால் சுமார் 1200ml வரையான மழை வீழ்ச்சியை வருடந்தோறும் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.