பிரபல தமிழ் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
ஸ்ரீ வேணுகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு வயது 82. சுகவீனம் காரணமாக சென்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் 1931 ஆம் ஆண்டு தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் கீழநத்தம் என்னும் இடத்தில் பிறந்தார்.
சமூகம், அறிவியல் மற்றும் மர்மம் தொடர்பான 1000ற்கு மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 200ற்கு மேற்பட்ட நாவல்களையும் புஷ்பா தங்கத்துரை எனும் பெயரில் இவர் எழுதியுள்ளார். இவரின் படைப்புக்கள் பிறமொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரின் எழுத்துக்களில் நீ நான் நிலா, நந்தா என் நிலா, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, என் பெயர் கமலா, எனது பீத்தல் குடை போன்றவை எழுத்துலகின் எல்லோராலும் அறியப்பட்டவை. இவைகளில் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது', 'நந்தா என் நிலா' போன்றவை திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன.
புஷ்பா தங்கதுரை தனது இயற்பெயரான ஸ்ரீ வேணுகோபாலன் எனும் பெயரில் பல ஆன்மீக கட்டுரைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.