வல்வெட்டிதுறையில் தற்பொழுது புதிதாகக் கட்டப்பட்டுவரும் புதிய சந்தை கட்டுமான வேலைகள் எதிர்வரும் பங்குனி மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த கட்டடக்காரர்களின் ஒப்பந்த காலம், குறித்த வேலைகள் பூர்த்தியாகத நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் 3 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய சந்தையை எதிர்வரும் சித்திரை மாதம் 16 ஆம் திகதி திறக்கப்படலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
NELSIP (North East Local Services Improvement Project, வடக்கு கிழக்கு உள்ளூராட்சித் திட்டம்) இன் கீழ், ரூபா 5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் இத்திட்டத்திற்கான அடிக்கல்லானது கடந்த சித்திரை மாதம் 7 ஆம் திகதி இடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த புதிய சந்தை கட்டடத்தில் அமையவுள்ள சுமார் 36 கடைகளுக்குரிய சட்டப்படியான அறிவித்தல் (ரெண்டர்-Tender) இனிவரும் மாதங்களில் கோரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.