முல்லைதீவிற்கு வடகிழக்காக தற்பொழுது சுமார் 40 கடல் மைல்கள் தொலைவில் மையம் கொண்டுள்ள தீவிர தாழமுக்கம் காரணமாக வல்வெட்டித்துறை, பருத்தித்துறை உட்பட்ட வடமராட்சி கடல் பகுதியும் தற்பொழுது கொந்தளிப்பாக உள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
அத்துடன் பொதுமக்களை கரையோரப்பகுதிகளிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் இருக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருவதையும் அவதனிக்கக்கூடியதாகவுள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் சாலை கரையைக் கடக்கவுள்ள தீவிர தாழமுக்கம் (Deep depression) தொடர்ந்து மேற்கு வட மேற்குத் திசையில் நகர்ந்து வலுவிளக்கவுள்ளது. ஆனாலும் இது குறிப்பிடக்கூடிய அனர்த்தங்களை உண்டு பண்ணும் என பெரிதும் நம்பப்படுகின்றது.
கீழே படங்களில் வல்வை கடற்கரைப் பகுதியின் தற்போதைய நிலமைகளைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.