இலங்கையின் திருகோணமலைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் தற்பொழுது புயலாக (Tropical Strom) மாறியுள்ளது. இது இன்று இரவு சாலை, முல்லைதீவு பகுதிகளுக்கிடையிலான கரையைக் கடக்கும் என கணிப்பிடப்படுகின்றது. ஆனாலும் கரையைக் கடக்கும் பொழுது இப்புயல் வலுவடைந்து தீவிர தாழமுக்கமாக (மினி சூறாவளி) மாறவுள்ளது.
இந்திய, இலங்கை நேரப்படி இன்றுகாலை 1130 மணியளவில் திருகோணமலைக்கு கிழக்காக சுமார் 55 கடல் மைல்கள் தொலைவில், அகலாங்கு 9.30 வடக்கு, நெட்டாங்கு 81.8 கிழக்கு என்னும் பகுதியில் இப்புயல் நிலைகொண்டிருந்தது.
இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட அதாவது சாலை, முல்லைதீவு பகுதிகளுக்கிடையிலான கரையக் கடக்கும் என கணிப்பிடப்படுகின்றது.
வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கம் பொதுவாக முதலில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு திசை நோக்கி நகர்வதே இயல்பு. தற்பொழுது இது இலங்கையை நேரடியாகத் தாக்குவது ஒரு அரிதான நிகழ்வாகும்.
வல்வெட்டித்துறை.org புயல் தொடர்பான அடுத்த செய்தி இன்று இரவு பிரசுரமாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.