வாய்க்காலிலுள்ள மணல் மற்றும் கழிவு நீரை அகற்றக்கோரி வல்வை நகரசபைக்கு மனு, இதுவரை நடவடிக்கை இல்லை என அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2014 (திங்கட்கிழமை)
வல்வை விக்னேஷ்வரா நிலைய நிர்வாகத்தினரால், வல்வெட்டித்துறை மதவடி வாய்க்காலில் உள்ள மணல் மற்றும் கழிவு நீரை அகற்றும் படி வல்வை நகரசபைக்கு கடந்த 30ஆம் திகதி மனுவொன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு தற்பொழுது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என அறிவிக்கப்பட்டு விக்னேஷ்வரா நிலைய நிர்வாகத்தினரால் ஒரு அறிக்கை விடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உதயசூரியன் வீதியில் அருகில் சிவகுரு வித்தியசாலையும், கடற்கரையை அண்டிய பகுதியில் விக்னேஸ்வரா பாலர் பாடசாலையும் அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
வல்வை விக்னேஷ்வரா நிலைய நிர்வாகத்தினரால் நாளை மறுதினம் குறித்த கடற்கரை பகுதியில் மாபெரும் பட்டப் போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.