தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். இவருக்கு வயது 86. கடந்த ஒரு வாரகாலமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தமிழக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1928 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 23 ஆம் திகதி ஆந்திர மாநிலத்தின் காக்கிநாட மாவட்டத்திலுள்ள பெட்டபுரத்தில் பிறந்த அஞ்சலிதேவி, தனது 8 ஆவது வயதில் நடிக்க ஆரம்பித்திருந்தார். அவர் 'கொல்ல பாமா' எனும் படத்தில் சி.புல்லையாவினால் மோகினி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருந்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை அஞ்சலி தேவி 5௦௦ ற்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் மணாளனே மங்கையின் பாக்யம், கணவனே கண்கண்ட தெய்வம், லவகுசா, அடுத்த வீட்டுப் பெண், நிரபராதி, சர்வாதிகாரி, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.