வடமாகாண அமைச்சினால் நடாத்தப்பட்டுவருகின்ற சதுரங்கப்போட்டியின் வரிசையில் பருத்தித்துறை மற்றும் கரவெட்டி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சதுரங்கப்போட்டி (Chess) இன்று நடைபெற்றது.
பருத்தித்துறை கோட்டமட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான போட்டி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியிலும், கரவெட்டி கோட்டமட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான போட்டி பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலையிலும் நடைபெற்றது.
பருத்தித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் வல்வை நகரசபை வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் பங்கு பற்றியிருந்தன.
ஒவ்வொரு வயது பிரிவுகளுக்குமிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டதுடன், இப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.
6 வயதிற்குட்பட்ட பிரிவின் ஆண்களுக்கான சதுரங்க போட்டியில் செல்வன் மு.பரிதியன் முதலாம் இடத்தினையும், செல்வன். ரா.தீபன்ராஜ் இரண்டாம் இடத்தினையும், பிரிவு 8இல் பிரதீபா மூன்றாம் இடத்தையும், செல்வி கு.கோபிகா நான்காம் இடத்தினையும், செல்வன் மு.சதுர்ஜன் எட்டாம் இடத்தினையும், செல்வி செளமியா எட்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
இவ் மாணவர்கள் அனைவரும் யா/வல்வை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் என்பதும், முதல் இரண்டு இடங்களைப்பெற்றவர்கள் தரம் 1 இல் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.