இந்திய நாட்டின் குடியரசு தினவிழா நேற்று புதுடெல்லியில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2014 (திங்கட்கிழமை)
குடியரசுத் தலைவர் திரு.பிரணாப்முகர்ஜி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்க, இந்தியப் பிரதமர்
திரு.மன்மோகன் சிங் அவர்கள் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நேற்றைய குடியரசு தினவிழாவில் யப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே (Shinso Abe) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
விழாவில் இந்தியாவின் அனைத்துப் படைகளின் அணிவகுப்பும், எல்லா மாநில மக்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடு சென்னை மரீனா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.