லண்டனில் கடந்த 21/01/2014 அன்று காலமாகிய திரு.நாராயணசாமி அருமைச்சந்திரன் (N.A.C) அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (28/01/2014) லண்டனில் நடைபெற்றது.
திரு.நாராயணசாமி.அருமைச்சந்திரன் அவர்களது பூதவுடல், இன்று காலை 11.45 மணியளவில் லண்டன் நகரின் ரூட்டிங் பகுதியில் உள்ள (Lambeth Crematorium) மின் மயானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், ஈமக்கிரியைகளைதொடர்ந்து பிற்பகல் சுமார் 13:00 பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் குறிப்பிடக்கூடிய வல்வை சார் லண்டன் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
திரு.N.A.C அவர்கள் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக ஆரம்ப கால முக்கிய உறுப்பினராகவும், கழக வளர்ச்சிக்கும், வல்வையின் வளர்ச்சிக்கும் இறுதிவரை அயராது முன்னின்று உழைத்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.