மகளிர் மகா வித்தியாசாலையின் இல்லமெய்வன்மை போட்டிகள் நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 07/02/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வை மகளிர் மகா வித்தியாசாலையின் இல்லமெய்வன்மை போட்டிகள் நாளை 08.02.2014 அன்று சனிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் செல்வி இ. சுப்பிரமணிக்குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இல்லமெய்வன்மை போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக்கல்விப்பணிப்பாளர், வடமராட்சி வலயம்) அவர்களும், பரிசில்களை வழங்கி கெளரவிற்பராக திருமதி யமுனா நந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இவ் இல்லமெய்வன்மை போட்டியை கண்டு களிக்க அனைவரையும் வருகைதருமாறு பாடசாலை சமூகத்தினர் அழைக்கின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.