இலங்கையின் தலைநகர் கொழும்பில் தற்பொழுது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. தற்போது நிகழும் இந்த காலநிலை நாளை காலை வரை நீடிக்கலாம் என இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
பூமியின் வட மற்றும் தென் துருவங்களில் இருந்து வீசும் காற்று சந்திக்கும் பகுதியான ITCZ (Inter Tropical Convergence Zone) பகுதியிலான தாக்கமே தற்போதைய காலநிலைக்குரிய காரணம் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
இதனால் இடியின் தாக்கம் இன்று பிற்பகல் அதிகரிக்கலாம் என்றும், நாட்டின் பல இடங்களில் 100 மில்லி மீட்டர்ற்கும் அதிகமான மழை வீழ்ச்சி சில இடங்களில் பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.