ரேவடி கடற்கரைப் பகுதியில் சுங்கத்தினர் அறிவிப்புப் பலகைகளை நாட்டியுள்ளனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/09/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை சந்தி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலிருந்த இராணுவத்தினர், ஊரிக்காட்டுப் பகுதிக்கு மாற்றமாகிவருவதையொட்டி, இப் பகுதிகளின் ஒரு பகுதியான ரேவடி கடற்கரைப் பகுதியில், இலங்கை சுங்க அதிகாரிகள் அண்மையில் அறிவிப்புப் பலகைகளை நாட்டியுள்ளனர்.
'இவ் ஆதனம் இலங்கை சுங்கத்துக்குரியது' எனப் பெயரிடப்பட்டு, சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் சுங்க அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் இரு அறிவிப்புப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. மேலும் குறித்த பகுதிகளைச் சுற்றி தடுப்புக்களும் போடப்பட்டுள்ளன.
இதே போன்ற அறிவிப்புப் பலகைகள் பருத்தித்துறையிலும், முன்னர் சுங்க அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில்
பருத்தித்துறையில் - கல்லூரி வீதியில், புதிய நகரசபைக்கு அருகாமையில்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.