கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இயங்க முடியாமல் சிதைவுற்ற நிலையிலிருந்த வல்வை சிதம்பராக்கல்லூரி பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள் பூர்தியடைந்துள்ளது.
நடைபெற்ற கந்தசஷ்டியின் 6 ஆம் நாள் வல்வை சிவன் கோவிலிலும் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மற்றும் தேவர்களின் தூதரான ஹென்துருவர் ஆகியோர் மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது.
இந் நிகழ்வின் மேலதிக படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த 17 ஆம் திகதி மரணமடைந்த சிவசேனாக் கட்சியின் தலைவர் பால் தாக்ரேயின் ஆஸ்தி இன்று இராமேஸ்வரத்தில் கரைக்கப்படவுள்ளதாக இந்தியப் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு கார்டூனிஸ்ட் ஆக தனது வாழ்க்கையை The Free Press Journal எனும் ஆங்கிலப் பத்திரிகையில் ஆரம்பித்த திரு.பால் தாக்ரே, 1960 களில் 'மார்மிக்' எனும் தனது சொந்த வாராந்த இதழை ஆரம்பித்து பின்னர் 'சாம்னா' எனும் தினசரிப்பத்திரிகையை நடாத்தி வந்தார்.
இன்று 06:11 தொடக்கம் 07:47 வரையான சுப நேரத்தில், வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்குரிய அடிக்கல், வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் நாட்டப்பட்டது. இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயக்குருக்கள் தண்டாயுதபாணிக தேசிகர் அவர்களின் சமயாச்சார கிரியைகளைத் தொடர்ந்து நடைபெற்றது.
வல்வெட்டித்துறை மதவடிஉதயசூரியன் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி மற்றும் சனசமூக நிலையத்தின் வேலைப்பாடுகள் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது.
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால், இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று சிதம்பராக் கல்லூரியில் நடைபெற்றது.
பருத்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 350 கடல்மைல் தொலைவில் தாழமுக்கம் ஒன்று நிலை கொண்டுள்ளது. இதனால் யாழ் தீபகற்ப கரையோரங்களுக்கு நேரடியான பாதிப்புக்கள் எதுவுமில்லை.
செய்மதியிலுருந்து எடுக்கபட்ட தாழமுக்கத்தின் வடிவினைப் படத்தில் காணலாம்.
வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினால் வல்வையில் ஒரு கல்யாண மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள தர்மகர்த்தா சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ளது.
இது வல்வையில் அமையவுள்ள முதலாவது கல்யாண மண்டபம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது.
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. படங்களில் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும், தெய்வ தரிசனத்தைப் பெறுவதற்கும் யாழ் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்களையும், முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிரேசன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மாலை 3 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வு சுமார் 6 மணியளவில் நிறைவெய்தியது.
நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' யைச் சிறப்பாகக் காட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு வல்வை அம்மன் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் இடையிலான பொது வீதியில் நடைபெறவுள்ளது.
தைத்திருநாளை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவாநிலையத்தினால் மாபெரும் வினோத பட்டம் விடும் போட்டியானது, உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் 14 / 01 / 2013 (திங்கட்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.
யாழ் கோட்டை தற்போது பார்வைக்கு அனுமதிகப்பட்டிருப்பதுடன் 'தொல்பொருள் சொத்தாகவும்' (Archaeological heritage' இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
செல்வசந்நிதி கோயிலில் கடந்த நான்கு நாட்காளாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டி வழிபாடுகளின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம் நாளான நாளை முருகன் சூரனை சம்ஹாரம் செய்து பக்தர்கள் அருள் பாலிப்பார். இங்கு முருகன் சூரனை சம்ஹாரம் செய்வதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
வல்வை வேம்படி உடையாமாணலில் இயங்கி வரும் கல்விக் கூடத்தில் இலவச 'கணித வகுப்புப் பயிற்சிப்பட்டறை' (Maths Workshop) இன்று காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புப் பயிற்சிப்பட்டறை மாலை நேரம் வரை நடைபெறவுள்ளது.
வடமாரட்சியின் நன்னீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படும் நீர்த் தாங்கிகளில் ஒன்று தொண்டமானாற்றில் செல்வசந்நிதி கோயிலுக்கு அருகாமையில், ஆற்றங்கரைக்கு எதிர்பக்கத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
வல்வையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைக்க உத்தேசிக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆரம்ப கட்டமாக நீச்சல் தடாகம் அமைப்பது சம்பந்தமான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
வல்வை வேம்படி உடையாமணலில் இயங்கிவரும் கல்விக் கூடத்தில் கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறை (Maths workshop) ஒன்று நாளை காலை (18/11/12) 08.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இலவசமாக நடைபெறவுள்ள இக்கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறையில் எந்தவொரு வல்வை மாணவரும் பங்குபெறமுடியும் என அறிவிக்கபட்டுள்ளது.
பல கின்னஸ் சாதனைகளைப் புரிந்த வல்வையைச் சேர்ந்த திரு.வி.ஸ்.குமார் ஆனந்தனுக்கு (ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு) வல்வையில் சிலை அமைப்பதற்கான ஆரம்ப முற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரியவருகின்றது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களுக்கு , வடமராட்சி வலய கல்விக் கோட்டத்தினால் வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய அதிபராக நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக துவாளி உடுப்பிட்டியைச் சேர்ந்த செல்வி இராஜலஷ்மி சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் (இலங்கை அதிபர் சேவை தரம் - 2 ), வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனத்தினைத் தொடர்ந்து இன்று பதவி ஏற்றுள்ளார்.
அனுஷ்டிக்கபட்டுக் கொண்டிருக்கும் கந்த சஷ்டியின் இறுதி நிகழ்வாக ஆலயங்களில் வருகின்ற 19 ஆம் திகதி சூரன்போர் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வல்வை சிவன் கோவிலில் 'சக்கரவானப் பட்சி' வெள்ளோட்டம் நேற்று சிறந்த முறையில் நடாத்தப்பட்டது. 'சக்கரவானப் பட்சி' நிகழ்வானது இலங்கையிலே வல்வை சிவன் கோவிலில் மட்டும் மேற்கொள்ளப்படுவது என்பது இங்கு குறிபிடத்தக்கது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களை இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. அதிபர் மாற்றம் இன்னும் ஓரிரு தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும், புதிய அதிபர் திருமதி.சுப்ரமணியம் எனவும் தெரியவருகிறது.
வல்வை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களின் முக்கிய செய்திகளை வாசகர்களுக்கு விரைவாக பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் எமது இணைய தளம் Facebook இல் இணைந்துள்ளது. எமது இணையதளத்தின் Facebook ID 'வல்வை இணையம்' - Valvai Inaiyam ஆகும். கடந்த இரு வாரங்களில் எம்முடன் Facebook இல் இணைந்த 285 வாசகர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பருவக் காற்றின் (சோளகக் காற்று) மாற்றத்தினைத் தொடர்ந்து, வழமை போல் வல்வையில் பட்டம் விடுதல் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பட்டங்கள் பொதுவாக எல்லா இடங்களில் விடப்பட்டாலும், மிகுந்த கலை நுணுக்கங்களுடன் அதிக பொருட்ச் செலவுகளுடன் பட்டங்கள் விடுதல் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித் துறை பகுதிகளிலே அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது.
வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் (VEDA) கடந்த 29 ஆம் திகதியிலுருந்து கொற்றங் கல்லடி, வேவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறை எனும் புதிய இடத்தில் இயங்குவதைப் படங்களில் காணலாம். வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் வல்வையின் நலன் விரும்பிகளின் உதவியுடன், ஒரு செயற்குழுவின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
முருகன் கோயிகளில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (14/11/2012) ஆரம்பமாகின்றது. 6 நாட்கள் நடைபெறும் சஷ்டி விழாவில், தினந்தோறும் முருகனுக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறும்.
இதில் வல்வை , நெடியகாடு, விண்மீன் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றிய இரண்டு போட்டிகள் சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான ரசிகர்கள் இவ்விரு போட்டிகளையும் கண்டுகளித்து, வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.