Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
சைனிங்க்ஸ் ஊக்குவிப்புக் குழுவினால் வல்வை விளையாட்டுக்கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் அரையிறுதியாட்டங்கள் இன்று வல்வெட்டித்துறை வேவில் பகுதியில் அமைந்துள்ள ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில்...
உணா மரங்கள், அவற்றினால் சூழப்பட்டுள்ள இடிபாடுகளுடன் கூடிய விடுதலைப் புலிகளின்
யுத்த கால சிலை ஒன்று, அம்மன், சிவன், பிள்ளையார், முருகன் என்னும் வரிசையில்
4 ஆவதாக அமையப்பெற்றுள்ள முருகையன் கோயில், புதிதாக கட்டப்பட்டு வரும் புட்கரணி
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை பிரசவ விடுதியின் புனரமைப்பிற்கு புலம்பெயர் நலன்விரும்பி ஒருவர் உதவி செய்ய முன்வந்துள்ளார். அண்மையில் பிரதேச வைத்தியசாலை உள்ள சாரங்கம்மா பிரசவ விடுதியை, பிரசவ விடுதியாகப் புனரமைக்க நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வேண்டுகோள் ஒன்றை....
கீழே கொடுக்கப்பட்டுள்ளது வெளிநாடுகளிலிருந்து எவ்வாறு பல இணையதளங்கள் இயங்குகின்றன என்பதை காட்டுவதாகும். நேற்று நாம் நேரடியாக சேகரித்து வெளியிட்டிருந்த குறித்த செய்தியை வெளியிட்டது வரவேற்கக் கூடியவொன்று எனினும், தாமே வெளியிடுவது போல் Copy செய்து பிரசுரிப்பது....
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் (ஜ.இ) ஒன்றுகூடல் நேற்று முன்தினம் (20.04.14) அன்று லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள லவன்டப் பாக்கில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து வசிக்கும் பெரும்பாலான உதயசூரியன் கழக....
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினால் பருத்தித்துறை லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியானது தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
மருத்துவத்துறையில் தாதியருக்கான கற்கை நெறி ஒன்று வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினால் (Vaiswa) முன்னெடுக்கப்படவுள்ளது. வாரத்தின் இறுதி நாடகளில் 1 வருடம் நடைபெறவுள்ள இந்த கற்கை நெறியைத் தொடரவுள்ள வசதி குறைந்தவர்களிற்கு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ....
உடுப்பிட்டி நலன்புரிச் சங்கம் (Uduppiddy Welfare association) வடமராட்சியின் வல்லைப் பகுதியில் நெய்தல் ஆலை ஒன்றை உருவாக்கியுள்ளனர்." இலங்கை நூற்றல் நெய்தல் ஆலை" - வல்லை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை (Ceylon Spinning and Textils Mills) எனப் பெயரிடப்பட்ட இந்த ஆலை வல்லையில்,
வல்வையைச் சேர்ந்த கே.எஸ்.துரையின் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் வெளியீட்டு விழா டென்மார்க் கேர்னிங் நகரில் கடந்த 22.03.2014 அன்று மதியம் 14.00 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. திரைப்பட வெளியீட்டு விழாவின் இறுதித் தொகுப்பு படங்களை கீழே காணலாம்.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள கடல் பகுதியில் உருவாக்கப்பட்டுவரும் கடல் தடாகத்திற்கான வேலைகளில் தற்பொழுது உழவு இயந்திரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டுவரும் குறித்த கடல் தடாகம்.....
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் எதிர்வரும் வருடத்துக்குரிய (2014 - 2015) விசேட உற்சவங்களின் விபரங்கள் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்கள் தேவஸ்தானத்தினால் வெளியிடப்பட்டுள்ள மகோற்சவ விஞ்ஞாபனம் 2014 மீண்டும் திருத்தி வெளியிடப்படவுள்ளதாகத்.....
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் மைதானம் தற்பொழுது புனரமைக்கப்பட்டு வருகின்றது. தீருவில் விளயாட்டுக் கழகத்தினரால் புனரமைக்கப்பட்டுவரும் இந்த முயற்சியின் முதற்கட்டமாக மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயரமான கம்பி வலைகள்......
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இந்த ஆண்டுக்கான இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நேற்று பிற்பகல் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.
யாழ் வடமராட்சியின் முன்னாள் பிரபல கணித ஆசிரியர் திரு.தில்லையம்பலம் அவர்கள் கடந்த 14 ஆம் திகதி காலமானார். சுமார் 30 வருடங்களிற்கு மேல் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ள திரு.தில்லையம்பலம் அவர்கள், க.பொ.த (உ/த) கணிதபாட ஆசிரியராக உடுப்பிட்டி அமிரிக்கன் மிஷன் கல்லூரியிலும்...
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபைத் தெரிவுக் கூட்டம் மிகவும் விறுவிறுப்பான சூழலில் காலை 10.00 மணியளவில் முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் பருத்தித்துறை பிரதேச தலைவர், மற்றும் கிராம சேவையாளர்கள், மற்றும் அரச
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களிற்க்கிடையிலான 40 வயதிற்கு மேற்பட்டோர்களிற்கான உதைபந்துப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று மாலை 4 மணிக்கு வல்வை ரெயின்போ கழகமைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் இளங்கதிர் விளையாட்டுக் கழகத்தை...
கடந்த 15/08/2013 அன்று அகால மரணமடைந்த திரு.மதியழகனின் குடும்பத்திற்கு, அவர்களின் காணி மற்றும் வீட்டினை திரும்பிப் பெறுவதில் இதுவரை உதவியவர்களிற்கு தமது நன்றியைத் தெரிவித்து உதவியவர்களின் விபரங்களையும் திருமதி மதியழகன் வெளியிட்டுள்ளார்.
வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு உட்பட்ட கழகங்களிற்க்கிடையிலான 40 வயதிற்கு மேற்பட்டோர்களிற்கான உதைபந்துப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று மாலை 4 மணிக்கு வல்வை ரெயின்போ கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில்
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இந்த வருடத்திற்கான மகோற்சவ விஞ்ஞாபனம் ஆலய தேவஸ்தானத்தினால்வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தர்மகர்த்தா சபைத் தெரிவுக்கூட்டம் ஏற்கனவே அறிவித்துள்ளபடி நாளை காலை ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வர்த்தமானிகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.....
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (Srilanka Youth club) இந்த ஆண்டுக்கான இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் வரிசையில் மெய்வல்லுனர் போட்டிகள் இன்றைய தினம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.
வல்லை தொண்டைமனாற்று நீர் நிலையில் இலட்சக்கணக்கில் மீன்கள் உட்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் நேற்றிலிருந்து இறந்து கொண்டிருக்கின்றன. இதற்கான காரணம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாதுவிடாதினும், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட அதிக வெப்பநிலையே பிரதான காரணம் என நம்பப்படுகின்றது.
வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் கடல் தடாகம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப வைபவம் கடந்த சித்திரை புதுவருட தினத்தன்று மேற்கொள்ளப்பட்டதையடுத்து, நேற்று பிற்பகல் முதல் கட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் எண்ணைக்காப்பு மற்றும் மஹாகும்பாபிஷேகம் எதிர்வரும் 29, 30.06.2014 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளன. இது சம்பந்தமாக ஆலய பரிபாலன சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழக ஐக்கியராச்சிய கிளையின் ஒன்று கூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பின்வரும் முகவரியில் இடம்பெறவுள்ளது. இது சம்பந்தமான மேலதிக விபரங்களைப் பெற பின்வரும் தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
நேற்று காலை விபத்துக்குள்ளான தென்கொரிய நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் கப்பலான "Sewol" தற்பொழுது கடலினுள் தாண்டுள்ளது. இச் சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளதுடன் 287 காணாமல் போயிள்ளனர்.
வல்வை அலையோசை, வல்வையிலிருந்து வெளியாகும் இணையதள சஞ்சிகை ஆகும். வல்வை எழுத்தாளர்களில் ஒருவரான திரு.தீபன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள இச்சஞ்சிகை 6 ஆவது இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய வாக்காளர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை அளக்கடவை ஒழுங்கையில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கத்தின் (Indoor Futsal ground) 2 ஆவது வருட நிறைவுயொட்டி சிறப்பு நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.